கடல் வாழ்க! 01


வான் சிறப்புப்பாடும் வள்ளுவன் "நீரின்றி அமையாது உலகு" என்பான். காலையில் எழுந்தவுடன் இந்த நீலநிறக் கடலைக் காணாவிடில் கண்கள் பூத்துப்போகின்றன. எனது முதல் அனுபவம் திருச்செந்தூர். அது ரொம்ப ஆக்ரோஷமான கடல். கிட்டக்க நெருங்கவிடாத கடல். பயமுறுத்தும் கடல். ஆனால், ஜெர்மனியிலுள்ள பால்டிக் கடல் ரொம்ப சாது. அலையே அடிக்காது (அலையில்லாமல் என்னய்யா கடல்? என்று கேட்காதீர்கள் :-) இரண்டாம் பனிக்காலம் முடிந்து கடல் உள்வாங்கும் போது தோன்றியதுதான் பால்டிக். ஆகப்பெரிய ஆழமே 300 மீட்டர்தான். அதிலும் நிறைய வளைகுடாக்கள் உண்டு. கீல் பே (வளைகுடா) 13 கிமி நீளமுடையது. ஒரே ஒரு மாசம்தான் அது தன் சூரத்தனத்தைக்காட்டும். அது நவம்பரில். அப்போது புயல் அடிக்கும். அவ்வளவுதான். அதுக்கப்புறம், அது ஏரி மாதிரி சாதுவா இருக்கும். அங்குதான் என் வாழ்வின் எத்தனை பொழுதுகள்! இப்போது இந்தக் கொரியத் தென்கடல். இதுவும் வளைகுடா. ரொம்ப சாது. ஏதோ காலையில் பார்க்கும் போது ஜிலு, ஜிலு என்று ஆறுபோன்ற பிரம்பிப்பைத் தருகிறது! கடலை எவ்வளவு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம். அது தரும் நிம்மதியே தனி.

Photo by N.Kannan

2 comments:

  Thangamani

5:25 pm

:)

  Muthu

9:12 am

உங்கள நிழற்படங்களில் தொழில்முறைக் கலைஞரின் தேர்ச்சி தெரிகிறது.