கடல் வாழ்க! 02


நதி பவித்திரமானது. ஒரே நதியில் இருமுறை கால் வைக்க முடியாது என்பார்கள். அவ்வளவு பவித்ரமான நதியில் கூட கோடையில் தேங்கிய குட்டை துர்நாற்றமடிக்கும். ஆனால் உலகின் ஆகப்பெரிய நீர்க்கிட்டங்கியான கடல் எப்போதும் பவித்ரமாக இருக்கிறது. உலகின் அழுக்கெல்லாம் அங்கு வந்து சங்கமித்தும் அது புனிதமாயுள்ளது! தன்னை எப்போதும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளும் அழகிய வீட்டுக்காரி போல் அது எப்போதும் சுத்தமாய், பார்க்க லட்சணமாய், கல்யாணத்தன்று பார்த்த மனைவி போல் எப்போதும் புதிதாய் உள்ளது.

இக்கடலைப் பார்க்கும் போது, என் வாழ்வின் தொடக்கம் இங்குதான் என்பதை நம்பமுடியவில்லை. Desmond Morris எழுதிய Naked Ape எனும் புத்தகத்தில் நமது மூத்த சகோதரர்களான மனிதக்குரங்குகள் மயிரும் மட்டையுமாய் இருக்கும் போது நாம் வழிச்சுவிட்ட மாதிரி மயிரற்று நிர்வாணமாய் நிற்கிறோம் (சில இடங்களில் எதற்குத்தான் மிஞ்சிவிட்டனவோ?). இந்த நிர்வாணம் நமக்குக் கடல் தந்தது என்கிறார். எப்படியாயினும் நாம் கடலிலிருந்து வந்தவர்கள்தானே! அதுதான் கருப்பை நீர்க்குடத்தில் இன்றுவரை மிதக்கிறோம். நீருடன் நமக்குள்ள பந்தம் தேவ பந்தம் என்கிறார் வைரமுத்து! உண்மைதான். நீரின்றி அமையாது உலகு. கடல் காணாக்கண்ணனும் அயர்வுருவான்! கடலே நீ வாழ்க!
Photo by N.Kannan

1 comments:

  Thangamani

5:30 pm

கடல் இனிது, மலை இனிது, காற்று நன்று. (மகா கவி)

அழகிய படம்