வசந்த அழகும், மாபல்லிச்சுவடும்


நேற்று இரண்டு சகாவுடன் ஒரு காலத்தில் டைனோசார்கள் (மாபல்லி) துள்ளி விளையாடிய குளக்கரை காணச் சென்றோம். போகும் வழியெல்லாம் வசந்தம் பூத்துக்குலுங்கியது. வயல்வெளியில் நெல் நடவு மும்முரமாக இருந்தது. குளங்களில் தாமரை பூத்துக்குலுங்கின. அழகு, அழகு! எங்கும் அழகு!

பலகோடி ஆண்டுகளுக்கு முன், மாபல்லிகள் வாழ்ந்த ஜுராசிக் காலத்தில் கொரியாவில் ஒரு பெரிய ஏரி இருந்திருக்கிறது. அங்கு சாக, மாமிச மாபல்லிகள் வாழ்ந்திருக்கின்றன. அவை காலம் முடிந்தது. அந்த ஏரியும் வற்றி, மக்கி, மண்ணாகி, மண் பாறையாகிப் போனது. காலப்போக்கில் கடல் மட்டம் உயர்ந்தது. அந்த ஏரி இருந்த இடம் இப்போது தென்கடல் கடற்கரையாக மாறிப்போனது. அங்கு போனது ஒரு பெரிய அனுபவம். டைனோசார் பற்றி கடந்த சில தசாம்ங்களில் ஆச்சரியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி மாபல்லிப் பாதப்பதிவுள்ள இடங்கள் உலகில் குறைவு. கொரியாவில் ஒன்று உள்ளது.

இந்தப் பயண அனுபவத்தை ஒரு புகைப்படத்தொகுப்பாக்கி இங்கு வழங்குகிறேன். கண்டு களியுங்கள்!
Photo by N.Kannan

0 comments: