ஜம்பைக் கல்வெட்டு:திருக்கோவிலூர்

புகழ் பெற்ற ஜம்பைக் கல்வெட்டு.திருக்கோவிலூர்(திருவண்ணாமலையிலிருந்து போகலாம்).தென் பெண்ணைக் கரையில் உள்ள ஊர்.ஏரியில் தண்ணீர் இருந்தால் கரை மீது நடந்து சுற்றி வரவேண்டும்.படத்தில் எங்கள் கல்லூரி மாணவர்கள் -ஆசிரியர்கள்.

ஸத்புதோ எனத் தொடங்கும் ஒரு வரி பிராமி கல்வெட்டு பின்னால் தெரிகிறது.அசோகனது கல்வெட்டில்'சத்யபுத்ர ' எனக்குறிக்கப்படும் மன்னர் அதியமான்களாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இக் கல்வெட்டு அதனை மெய்ப்பித்துவிட்டது.

சத்யபுத்ர =அதியமான் எப்படி?
சத்ய - அத்ய (மொழி முதல் சகரம் கெடல், எ-கா: சமணர்-அமணர்.சுப்பு -உப்பு, சிறகு-இறகு)புத்ர - மகன்மகன் - மான் (இடையிலே நின்ற ககரம் கெட்டு உயிர் நீண்டது. (எ-கா: பகுதி=பாதி, மிகுதி =மீதி, பகல் =பால்)

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.



தமிழ் எழுத்து வளர்ச்சி, பரிணாமம் குறித்து மேலுமறிய: தமிழ் மரபு அறக்கட்டளை

0 comments: