புத்தஜெயந்தி 2010



தென்கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) புத்தர் கோயிலில் ஆயிரக்கணக்கான தாமரை விளக்குகள் ஏற்றி ஆயிரக் கணக்கானோர் சென்ற வெள்ளியன்று (21.05.10) வழிபட்டனர். அப்போது செல்பேசி கொண்டு எடுக்கப்பட்ட படம்.

செம்மொழி மாநாடும் உமர்தம்பியும்!



தன்னலமற்ற தமிழ்ச்சேவை செய்த திரு.உமர்தம்பிக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச் செம்மொழி நாட்டில் கிடைக்குமா என்பது குறித்தான உரைச்சித்திரம்.

மரம்



மரங்கள் இயற்கையின் அற்புத வடிவங்கள். மரங்கள் இல்லையெனில் மண்ணில் மழையில்லை. சுத்தமான காற்று இல்லை. புத்தர் காலத்தில் தோன்றிய மரங்களெல்லாம் இன்றும் வாழ்கின்றன. மரங்களை நோக்கும் போது மனிதன் மிகச்சிறியவன். ஆனால், அவன் நினைத்தால் ஒரு காட்டையே அழித்துவிடமுடிகிறது. எனவே மனிதர்கள் தங்கள் பொறுப்பறிந்து பிற உயிர்களிடம் அன்பு செய்து வாழ வேண்டும். கொரியா தன் நாட்டு பழம் மரங்களுக்காக தபால்தலை வெளியிட்டுள்ளது. நம்மாழ்வார் ஒரு பாடலில் இறைவனையே

வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர

என்றழைக்கிறார். நாமும் நம் மரங்களை அன்புடன் நேசிப்போமாக!

ஜோதி




தன்னொளி குறையாமல் மற்றொன்றை உயர்த்தும் விளக்கு!

மகரந்தக் கோலம்



ஊசியிலை மரங்கள் வீசும் மகரந்தம், வரைகின்றன நீர்க்கோலங்கள்!