பசுமையின் வெண்மை

1 comments:

  Anonymous

11:05 pm

வகுப்பறைக்குள் மாணவியர் மலர்கள் கூட்டம்,
.. வரிசையிலே நின்றாசான் வரவை நோக்கும்;
தகதகக்கும் இலைப்பலகை தத்தம் கையில்
.. தாளெழுதக் கோலாகும் தண்டே; ஆசான்
முகப்பினிலே கதிர்க்கோலை முன்னர் நீட்டி
.. முகஞ்சிவக்கும் பகலவனே; முறைப்பைக் கண்டு
மிகபயந்து பாவாடைக் குள்ளாய்த் தத்தம்
.. முகமறைத்து நிற்குமந்த மலர்கள் பாவம்!

சந்தர் சுப்ரமணியன்

www.MovingMoon.com