முத்துச்சரம்!


முத்துச்சரம் கடலில் மட்டும்தானா?

தெருவோர அழகு!


தெரு ஓரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் கிடக்கும் அழகு இது! சின்னச் செடி!

மண்டலம்


யந்திரம், மண்டலம் என்பதெல்லாம் இயற்கையின் அமைப்பு போலும்!

பொசு, பொசு


பொசு, பொசுவென்று எது இருந்தாலும் அழகு, புல்லென்றாலும், முயலென்றாலும்!

முழுநிலவிற்கு முன்

எட்டிப்பார்க்கும் களை


தோட்டக்காரனின் கத்தி தீண்டும்வரையிலான சுதந்திரக் காற்று தீண்டுதல்!

மீண்டுமோர் அந்து!

கொரியக் குழந்தைகள் ஆடை

திருவடியா? வெறும் அடியா?



இந்த அடி நினைவிற்கு வருகிறது!

ஒளிரும் மரம்!


பெரிய கட்டிட வேலை நடக்கிறது. வாரக்கடைசி. எல்லோரும் போய்விட தனியே ஒளிரும் மரம்!

நீர்மூழ்கி


ஒரு காலத்தில் உபயோகத்திலிருந்த நீர்மூழ்கி ஆய்வகம். 3 விஞ்ஞானிகள் பயணிக்கலாம். 300 மீட்டர் ஆழம் போகும்!

கட்டிப்போடும் கயறின் காட்சி


ஓடத்துறை மீண்டும். இரவில் எல்லாமே வித்தியாசம்தான்!

கரைமீதமர்ந்த கிளையினூடே!


ஒரு ஊசியிலை மரம் கடல் கரை கடக்கா வண்ணம் போட்டிருக்கும் கற்பாறை திண்டில் வளர்ந்து நிற்கிறது. அதனூடாக குடாக்காட்சி!

இரவில் குடா!


இரவில் கண்கள் பார்க்கின்றன. நம்மைவிட பூனை, புலிகளுக்கு இரவுக் காட்சியில் தெளிவுண்டு. காமிரா எல்லோரையும் சாப்பிட்டு முழுங்கிவிடுகிறது. என்ன அழகு!

விரையும் ஒளியென விமானம்


இரவுப்படப்பிடிப்பில் நகரும் பொருட்கள் சுவாரசியமான சுவடுகளை விட்டுச் செல்லும். இப்படமெடுக்கும் போது ஒரு விமானம் கேமிராவை நோக்கி வந்து கொண்டு இருந்தது.அது விட்டுச் சென்ற ஒளிச்சுவடு காணீர்!

நீர்நிலை


நிலவின் ஒளியும், விளக்கொளியும் சேர்ந்து நீர்நிலையை காவியமாக்குகின்றன.

தூங்கமுயலும் அந்து


இரவில் விழித்து பகலில் தூங்கும் அந்து, படிக்கட்டில் வந்திறங்கி பகலவன் நேர் எதிரே நின்றால் எப்படி உறங்க?

கடற்கரை!

விண்ணின் மாட்சி

கடல்மஞ்சு


இன்று கடலிலிருந்து நீர்ப்புகை (மேகத்தில் ஒரு வகை)மேலே கிளம்பி மலையைத்தொட்டது!

பற்றுக!


ஓடத்தை தரையுடன் இணைக்கக் கட்டும் கயிறு நீரில் விழுந்தவுடன் பற்றிக் கொண்டு வளர்கின்றன சிப்பிகள். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்பது போல் பற்றுதல் வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிறது!

வனப்பு


காதல் செய்வதற்கு கவர்ச்சி ஒரு காரணி. பூத்துக்குலுங்கும் அழகு!

பிள்ளைத்தாச்சி


பிள்ளைத்தாச்சி என்றவுடன் மானுடப் பெண்தான் நினைவிற்கு வர வேண்டுமா? இவளும் வளைந்து, வயிறு தள்ளி, வனப்புடன்தானே இருக்கிறாள்?

சில்லென்று ஒரு சிலிர்ப்பு


தோகை விரித்து ஆடும் மயில் அவ்வப்போது சிலிர்த்துக்கொள்ளும், இது போல்!

தோற்றப்பிழை


நீர்த்துளி போல் தோற்றமளிக்கும் நோய்க்கட்டிகள்!

தளிர்

மலருக்கு மாலை!


மலர்தான் மாலையாக வேண்டுமா? மலருக்கும் மாலையுண்டு!

விதை கண்ட பின் வீழும் மலர்


குனிந்த நிலையில் அல்ல மலர், கூர்ந்து கவனித்தால் இதழ்கள் மெல்லக் கீழே வீழ்ந்தல் காணலாம். கருவுற்ற நிலையில் ஆடம்பரங்களைக் களைகிறது மலர்!

வலையனின் வலை!



வலையன் வலை விரித்தான் இறால், நண்டு பிடிக்க. வலைக்குள் உயிர் வதை என்றாலும் வலைமேல் ஆயிரம் உயிர்கள் அண்டி வளர்ந்தன!

எண்வரம்பின் அறியா யாக்கை!

இரவில் படகுத்துறை



இரவில் படமெடுப்பது ஒரு கலை. கேமிராவை மிகுவிழிக்கச் செய்து, ஒளிசேரும் இடத்தை மிகுபதப்படுத்தி எடுக்க வேண்டும். கை நடுங்குதல் கூடாது. இப்படிப் பல நிபந்தனைகள். எல்லாம் கூடி வந்தால் ஒரு கவிதை கண் முன் நிற்கும்!

புயல் வரும் பின்னே! கப்பல் வரும் முன்னே!



கொரியாவை புயல் கடக்குமென்று தெரிந்தால் பல கப்பல்கள் எங்கள் ஆய்வகத் துறைக்கு வந்துவிடும்!

தியான்மு புயல் (2)



நல்ல வேளையாக புயற்சேதம் இங்கில்லை!

மாலை வானும், கடலும்



விண்ணும் மண்ணும் ஒன்றையொன்று ரசித்துக் கொண்டிருக்கும் மாலை!

கப்பல் மூழ்குகிறதா? (படம் 1)

கப்பல் மூழ்குகிறதா? (படம் 2)



ஓ! இல்லை இல்லை! இரண்டு கப்பல்கள் அருகருகே! சின்னக்கப்பல் பெரிய கப்பலுக்கு ஒத்தாசை இயைவு.

செம்மொழியான தமிழ் மொழியாம்!



வீடியோ பார்த்தவுடன்தான் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் பாணியில் தயார் செய்திருப்பது புரிகிறது. இம்மாதிரியான இசை முயற்சிக்கு முதல் வித்து We are the world எனும் 1985ம் ஆண்டு ஆல்பம். அதில் 21 கலைஞர்கள் பாடி உலக சரித்திரம் படைத்தார்கள். ரகுமான் நமது தேசியகீதத்தை இம்மாதிரி அமைத்தார். இப்போது அதே பாணியில் தமிழ் மொழிப்பாடலை அமைத்துள்ளார்.

ஆரம்பமே மதுரை மீனாட்சி என்பதால் இது சூப்பர் ஹிட்தான் (மதுரைப்பாசம் போகுமா?)

அடுத்து, ”ஆதிபகவன் உலகு” என்ற இறை வாழ்த்து! இனி யாரும் குறை சொல்ல வழியில்லை :-)

புத்தஜெயந்தி 2010



தென்கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) புத்தர் கோயிலில் ஆயிரக்கணக்கான தாமரை விளக்குகள் ஏற்றி ஆயிரக் கணக்கானோர் சென்ற வெள்ளியன்று (21.05.10) வழிபட்டனர். அப்போது செல்பேசி கொண்டு எடுக்கப்பட்ட படம்.

செம்மொழி மாநாடும் உமர்தம்பியும்!



தன்னலமற்ற தமிழ்ச்சேவை செய்த திரு.உமர்தம்பிக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச் செம்மொழி நாட்டில் கிடைக்குமா என்பது குறித்தான உரைச்சித்திரம்.

மரம்



மரங்கள் இயற்கையின் அற்புத வடிவங்கள். மரங்கள் இல்லையெனில் மண்ணில் மழையில்லை. சுத்தமான காற்று இல்லை. புத்தர் காலத்தில் தோன்றிய மரங்களெல்லாம் இன்றும் வாழ்கின்றன. மரங்களை நோக்கும் போது மனிதன் மிகச்சிறியவன். ஆனால், அவன் நினைத்தால் ஒரு காட்டையே அழித்துவிடமுடிகிறது. எனவே மனிதர்கள் தங்கள் பொறுப்பறிந்து பிற உயிர்களிடம் அன்பு செய்து வாழ வேண்டும். கொரியா தன் நாட்டு பழம் மரங்களுக்காக தபால்தலை வெளியிட்டுள்ளது. நம்மாழ்வார் ஒரு பாடலில் இறைவனையே

வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர

என்றழைக்கிறார். நாமும் நம் மரங்களை அன்புடன் நேசிப்போமாக!

ஜோதி




தன்னொளி குறையாமல் மற்றொன்றை உயர்த்தும் விளக்கு!

மகரந்தக் கோலம்



ஊசியிலை மரங்கள் வீசும் மகரந்தம், வரைகின்றன நீர்க்கோலங்கள்!

பனியின் ஜாலம் (7)

கடலில் மிதக்கும் படகு கரையேறி பனியில் மூழ்கிக்கிடக்கிறது!

பனியின் ஜாலம் (6)

பனியின் கனம் கூடினால் படகும் கவிழும்!

பனியின் ஜாலம் (5)

கடலாய்வில் துணை போகும் உபகரணங்கள் பனி செய்து காட்சிப்பொருளாய்!

பனியின் ஜாலம் (4)

கரையில் ஒதுங்கிய குப்பை கூளம் கூட (marine debris) பனியின் கைவண்ணத்தில் காட்சிப்பொருளாகிறது!

பனியின் ஜாலம் (3)

வண்ணத்தில் காலைத் தோய்த்து வரையும் ஒரு கலையுண்டு. ஆனால் இங்கு வெறும் சுவடுகள் கூட பனிப்பதமாக ஓவியமாகிறது!

பனியின் ஜாலம் (2)

ஓவியம் வரையப் படுதா வேண்டும், ஆனால் இங்கு படுதாவே ஓவியம் போல் (modern art) காட்சியளிப்பதை ரசியுங்கள். எல்லாம் பனி செய்யும் ஜாலம்!

பனியின் ஜாலம் (1)

துளித்துளியாய் பனி மண்ணை மூடும் போது பெரிய கிராபிக் எபெக்ட் (Graphic effect)எல்லாம் கொடுக்கிறது. பனிமூடிய படிக்கட்டு இது. நம்பமுடிகிறதா?

கொரியக் கடலாய்வு மையம் (குறும்படம்) - KORDI



Click here to view video (படம் பார்க்க இங்கே சொடுக்கவும்)

குளுரில் நடுங்கும் நகரங்கள்

புறவெளி குளிர்ந்துவிடும் போது, கட்டிடத்தின் சூடு கூட ஆவியாய் தெரிகிறது. சோல் (தென் கொரியா) நகரம். ஜனவரி 2010



நன்றி. The Korea Herald (2010-1-8)

செத்தவரை பாறை ஓவியம்

செத்தவரை பாறை ஓவியம். விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் வேட்டவலத்திலிருந்து திரும்பி செத்தவரை செல்ல வேண்டும்.உயரமான மலையில் ஏற வேண்டும். கீழ்வாலை ஓவியங்கள் காவி வண்ணத்தில் உயரமற்ற பாறைகளில்.இது வெண்ணிறம்.மானைப் பாருங்கள் :பிற உருவங்களும் உண்டு.

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி



தமிழ் மரபின் ஆகப்பழமையான ஓவிய வடிவங்களைக்காண: முதுசொம் காலரி

ஜம்பைக் கல்வெட்டு:திருக்கோவிலூர்

புகழ் பெற்ற ஜம்பைக் கல்வெட்டு.திருக்கோவிலூர்(திருவண்ணாமலையிலிருந்து போகலாம்).தென் பெண்ணைக் கரையில் உள்ள ஊர்.ஏரியில் தண்ணீர் இருந்தால் கரை மீது நடந்து சுற்றி வரவேண்டும்.படத்தில் எங்கள் கல்லூரி மாணவர்கள் -ஆசிரியர்கள்.

ஸத்புதோ எனத் தொடங்கும் ஒரு வரி பிராமி கல்வெட்டு பின்னால் தெரிகிறது.அசோகனது கல்வெட்டில்'சத்யபுத்ர ' எனக்குறிக்கப்படும் மன்னர் அதியமான்களாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இக் கல்வெட்டு அதனை மெய்ப்பித்துவிட்டது.

சத்யபுத்ர =அதியமான் எப்படி?
சத்ய - அத்ய (மொழி முதல் சகரம் கெடல், எ-கா: சமணர்-அமணர்.சுப்பு -உப்பு, சிறகு-இறகு)புத்ர - மகன்மகன் - மான் (இடையிலே நின்ற ககரம் கெட்டு உயிர் நீண்டது. (எ-கா: பகுதி=பாதி, மிகுதி =மீதி, பகல் =பால்)

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.



தமிழ் எழுத்து வளர்ச்சி, பரிணாமம் குறித்து மேலுமறிய: தமிழ் மரபு அறக்கட்டளை