மரம்



மரங்கள் இயற்கையின் அற்புத வடிவங்கள். மரங்கள் இல்லையெனில் மண்ணில் மழையில்லை. சுத்தமான காற்று இல்லை. புத்தர் காலத்தில் தோன்றிய மரங்களெல்லாம் இன்றும் வாழ்கின்றன. மரங்களை நோக்கும் போது மனிதன் மிகச்சிறியவன். ஆனால், அவன் நினைத்தால் ஒரு காட்டையே அழித்துவிடமுடிகிறது. எனவே மனிதர்கள் தங்கள் பொறுப்பறிந்து பிற உயிர்களிடம் அன்பு செய்து வாழ வேண்டும். கொரியா தன் நாட்டு பழம் மரங்களுக்காக தபால்தலை வெளியிட்டுள்ளது. நம்மாழ்வார் ஒரு பாடலில் இறைவனையே

வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர

என்றழைக்கிறார். நாமும் நம் மரங்களை அன்புடன் நேசிப்போமாக!

1 comments:

  முனைவர் இரா.குணசீலன்

10:50 am

தேவையான பதிவு.