செத்தவரை பாறை ஓவியம்

செத்தவரை பாறை ஓவியம். விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் வேட்டவலத்திலிருந்து திரும்பி செத்தவரை செல்ல வேண்டும்.உயரமான மலையில் ஏற வேண்டும். கீழ்வாலை ஓவியங்கள் காவி வண்ணத்தில் உயரமற்ற பாறைகளில்.இது வெண்ணிறம்.மானைப் பாருங்கள் :பிற உருவங்களும் உண்டு.

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி



தமிழ் மரபின் ஆகப்பழமையான ஓவிய வடிவங்களைக்காண: முதுசொம் காலரி

ஜம்பைக் கல்வெட்டு:திருக்கோவிலூர்

புகழ் பெற்ற ஜம்பைக் கல்வெட்டு.திருக்கோவிலூர்(திருவண்ணாமலையிலிருந்து போகலாம்).தென் பெண்ணைக் கரையில் உள்ள ஊர்.ஏரியில் தண்ணீர் இருந்தால் கரை மீது நடந்து சுற்றி வரவேண்டும்.படத்தில் எங்கள் கல்லூரி மாணவர்கள் -ஆசிரியர்கள்.

ஸத்புதோ எனத் தொடங்கும் ஒரு வரி பிராமி கல்வெட்டு பின்னால் தெரிகிறது.அசோகனது கல்வெட்டில்'சத்யபுத்ர ' எனக்குறிக்கப்படும் மன்னர் அதியமான்களாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இக் கல்வெட்டு அதனை மெய்ப்பித்துவிட்டது.

சத்யபுத்ர =அதியமான் எப்படி?
சத்ய - அத்ய (மொழி முதல் சகரம் கெடல், எ-கா: சமணர்-அமணர்.சுப்பு -உப்பு, சிறகு-இறகு)புத்ர - மகன்மகன் - மான் (இடையிலே நின்ற ககரம் கெட்டு உயிர் நீண்டது. (எ-கா: பகுதி=பாதி, மிகுதி =மீதி, பகல் =பால்)

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.



தமிழ் எழுத்து வளர்ச்சி, பரிணாமம் குறித்து மேலுமறிய: தமிழ் மரபு அறக்கட்டளை

ஆழ்கடல் அனலடுப்புகள்

Hydrothermal Vents on Earth

கருங்குழி - குறும்படம்

மண்ணின் மொழி

புழக்கடையில் எண்ணைக்கசிவு

காலையில் வேலைக்கு வந்தவுடன் சகா மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தான்! எங்கே மண்ணெண்ணெய் வாசனியென்று. பின்னால்தான் தெரிந்தது, வளைகுடாவில் யாரோ இரவில் டீசலைக் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று. மீதம் வீடியோவில்...

சினிமா காட்டும் கேமிரா

தொழில்நுட்பம் போகும் வேகம், திசை ஆச்சர்யமாகவே உள்ளது. முதலில் pinhole camera, பின் film camera, பின் digital camera, பின் camera with video function, இப்போது திரையில் படம் காட்டும் கேமிரா! Science fiction என்பது மெல்ல மெல்ல நிகழ்வாகும் விந்தை. இன்னும் சில காலங்களில் hologram ல் வீடியோ காட்டலாம். அதிக தூரமில்லை!

கிம்சி முகவுரை!

பன்றிக்காய்ச்சல் கூட பேஷனாகிவிட்டது. கிம்சி என்பது கொரியர்களின் ஊறுகாய். இதை உண்பதால் பன்றிக்காய்ச்சல் போகும் எனச் சொல்லும் விளம்பரம்! எவ்வளவுதூரம் உண்மை?



செய்தி மூலம்: கொரியன் ஹெரால்ட்

காய்ச்சல்!!

பன்றிக்காய்ச்சல் கொரியாவில் மூன்று பேரைத்தான் இதுவரை கொன்றிருக்கிறது. அதற்குள் ஏகப்பட்ட கெடுபிடி. பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்படுகிறது. இருமல், காய்ச்சல் இருந்தால் முகமூடிதான். இங்கு அலுவலக அழகிகள் தற்காப்பு கவசம் அணிந்து வேலை செய்வதைக் கவனிக்க!

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

ஆச்சர்யமான வகையில் ஆகஸ்டு 15ம் நாள் கொரியாவின் விடுதலை (liberation day) ஆகும். ஜப்பானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாள்! எனவே இந்திய-கொரிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

7வயது காரோட்டி!

எல்லாக் குழந்தைகளுக்கும் காரோட்டப் பிடிக்கும்! நான் வளர்ந்த காலத்தில் குதிரைச் சவாரி பெரிதாகப்பட்டது. எல்லாம் எம்.ஜி.ஆர் எபெக்ட் :-) புகுமுகவகுப்பு (PUC) படிக்கும் போதுதான் கார் ஓட்டுவது எப்படி? என்று அறிந்து கொண்டேன்..ம்ம்..வெறும் பாடம்தான். ஏட்டுச்சுரைக்காய்! வேலை கிடைத்து ஜெர்மனி போன போதுதான் சொந்தத்தில் கார் வாங்கி ஓட்டினேன். ஆனால் ஒரு அமெரிக்கச் சிறுவன் ஏழு வயதில் கார் ஓட்டி காவலரை திகைக்க வைத்திருக்கிறான். வீட்டுக்கு ஓட்டி வந்து விட்டு, பயந்தடித்து ஓடும் காட்சி அற்புதம்!

Video Courtesy of KSL.com

புவியன்பு செய்க!

மண்ணோவியம்!



மலாய்காரர் பாடும் தமிழ்ப்பாட்டு -2

மலாய்காரர் பாடும் தமிழ்ப்பாட்டு -1

நீ! எனும் அற்புதம்!!

ஒரு நிமிட மாற்றம்!!

இ-மாசு (சூழல் காலனித்துவம்)

மூன்றாம் உலகநாடுகள் முதல் உலகநாடுகளின் குப்பை மேடாக மாறிவருகின்றன. அமெரிக்கா பசுமையுறலாம். ஆனால், அழிவது இந்தியாவோ, சீனாவோ? என்றால் அது என்ன நியாயம். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களூரில் என்ன நடக்கிறது என்று கண்காணியுங்கள்!!


Watch CBS Videos Online

மொட்டை அழகு

எனக்கு இந்த மொட்டை மீது ஆர்வமும், பயமும் உண்டு. முடியைக் கொடுப்பது என்பது நமது ஈகோவைக் கொடுப்பதற்கு ஒப்பு, அதனால் பயம். ஆனால், மொட்டையில் ஒரு அழகு இருக்கு. அதனால் ஒரு கவர்ச்சி. புத்த ஜெயந்தி ஏற்பாடுகளில் ஒன்றாக கொரியக் குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஒரு வழக்கம். அது குழந்தைகள் மத்தியில் எவ்வளவு ஆர்வத்தை உருவாக்குகிறது பாருங்கள்.

கொரியப்பாடல்-சிறுமியின் திறமை!